ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்ட பிஎஸ்-4 ரக வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்படுகிறது. ஒன்றிய அரசு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில், 2020-ம் ஆண்டு பிஎஸ்-4 வகை வாகனங்களை பதிவு செய்ய தடை விதித்தது.
மேலும், மறு உத்தரவு வரும் வரை பிஎஸ்-4 இன்ஜின் ரக வாகனங்களை பதிவு செய்யக்கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் பிஎஸ்-4 வாகன விற்பனை அடியோடு சரிந்து, விற்பனையாளரிடம் தேக்கம் அடைந்தது. இந்நிலையில், பிஎஸ்-4 வாகனங்களுக்கு முறைகேடாகப் பதிவு நடக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
இதில் சில இடைத்தரகர்கள் போலியான ஐடிகளை உருவாக்கி, அதன் மூலம் பிஎஸ்-4 வாகனங்களை பதிவு செய்கின்றனர். பின்னர், இந்த வாகனங்களை ஒருவர் வாங்கி, மற்றொருவரிடம் போலி ஆவணங்கள் மூலம் விற்கிறார்கள்.
அந்தவகையில், இரண்டாவது நபரிடம் இருந்து மூன்றாவது நபர் வாங்க வரும் போது குறைந்த பட்சம் இத்தனை கி.மீ இயக்கப்பட்ட நிலையில், விலையும் குறைவாகக் கிடைப்பதாகக் கருதி, வாகனத்தை வாங்கிவிடுகின்றனர்.இந்த நூதன மோசடியில் சில நிதி நிறுவனங்களும் இணைந்துள்ளன. அதன்படி, தங்களிடம் வாகனக் கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாததால் ஏலம் விடப்படும் வாகனங்களின் பட்டியலில் முறைகேடாகப் பதிவு செய்யப்பட்ட வாகன விவரங்களையும் இணைத்து விளம்பரம் செய்துள்ளன.
இந்த மோசடி நிறுவனங்களிடம் இருந்தும் சிலர் போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட பிஎஸ் 4 ரக வாகனங்கள் ஏராளமானோர் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இதில் சில போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பதால், வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடங்கி உள்ளது.
Tags:
#பி.எஸ்-4
# வாகனங்கள்
# போலி ஆவணங்கள்
# உச்ச நீதிமன்றம்