அரசுப்பேருந்துகளில் ரூ.10, ரூ.20 நாணயங்களை நடத்துனர்கள் வாங்க மறுத்தால் நடவடிக்கை: போக்குவரத்து கழகம் எச்சரிக்கை..!!

அரசுப்பேருந்துகளில் ரூ.10, ரூ.20 நாணயங்களை நடத்துனர்கள் வாங்க மறுத்தால் நடவடிக்கை: போக்குவரத்து கழகம் எச்சரிக்கை..!!
By: TeamParivu Posted On: November 24, 2022 View: 68

அரசுப்பேருந்துகளில் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை நடத்துனர்கள் வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது. மாநகர பேருந்துகளில் பயணசீட்டுக்காக மக்கள் வழங்கும் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை நடத்துனர்கள் வாங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை ரிசர்வ் வங்கி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ளது. தமிழகத்தில் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் ரூ.10 நாணயங்கள் செல்லாது என அவ்வப்போது வதந்திகள் பரவுவதால் பரவலாக யாரும் வாங்குவதில்லை.

இந்த நிலையில் அரசுப்பேருந்துகளில் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை நடத்துனர்கள் வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது. பேருந்துகளில் பயணிகள் தரும் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை மறுக்காமல் பெற்று பயணசீட்டு வழங்க வேண்டும் என நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் ஆணையிட்டுள்ளது.

Tags:
#அரசுப்பேருந்து  # நாணயம்  # பயணசீட்டு  # போக்குவரத்துகழகம்  

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..