முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கடலூர் கிழக்கு மாவட்டம் முழுவதும் தொண்டர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடலூர் கிழக்கு மாவட்டத்தில், மார்ச் 1ல் பிறந்த நாள் விழா காணும் தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழாவினை மாநகரம், நகரம், பகுதி, பேரூர், ஊராட்சி பகுதிகளில் வார்டு மற்றும் கிளைகள் தோறும் கட்சி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, அன்னதானம் வழங்கி, பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள், மருத்துவ முகாம்கள், ரத்ததான முகாம்கள், மரக்கன்று நடுதல் மற்றும் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாடிட வேண்டும்.
மேலும் மார்ச் 1ம் தேதி காலை 9 மணி முதல் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் தலைவர்களிடமும், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடமும் வாழ்த்துகளை பெறுகிறார். மாலை 5.00 மணியளவில் சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 70வது பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.
நிகழ்ச்சிகளில் கடலூர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், உள்ளிட்டோர் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:
#முதல்வர்
# நலத்திட்டஉதவிகள்
# பன்னீர்செல்வம்