பல்லாவரம் அருகே கனரக வாகனம் மோதி காவலாளி பலி..!!

பல்லாவரம் அருகே கனரக வாகனம் மோதி காவலாளி பலி..!!
By: TeamParivu Posted On: March 15, 2023 View: 69

பம்மல், எல்ஐசி காலனி 6வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (51). இவர், திருமுடிவாக்கம் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். வேலை முடிந்ததும், தனது பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். திருமுடிவாக்கம் திருநீர்மலை பிரதான சாலையில் சென்றபோது, அடையாளம் தெரியாத கனரக வாகனம் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஹரிஹரன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஹரிஹரன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தி விட்டு, தப்பியோடிய கனரக வாகன ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Tags:
#சாலைவிபத்து  # போக்குவரத்து  # காவலாளி 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..