சிஆர்பிஎப் வீரர்கள் 436 பேர் தற்கொலை..!!

சிஆர்பிஎப் வீரர்கள் 436 பேர் தற்கொலை..!!
By: TeamParivu Posted On: March 16, 2023 View: 9

ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் தெரிவித்த பதிலில், ‘‘கடந்த 3 ஆண்டுகளில் சிஆர்பிஎப், எல்லை பாதுகாப்பு படை போன்ற ஒன்றிய ஆயுத போலீஸ் படையைச் சேர்ந்த 436 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டதாக ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார். 

2022ம் ஆண்டில் 135 பேரும், 2021ம் ஆண்டில் 157 பேரும், 2020ம் ஆண்டில் 144 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைக்கான காரணங்களை அடையாளம் காணவும், தடுப்பு நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு தற்போது அறிக்கை தயாரித்து வருகிறது’’ என்றார்.

Tags:
#ஒன்றியஉள்துறை  # சிஆர்பிஎப்  # வீரர்கள் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..