ஒன்றிய அரசு பணிகளுக்கு அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை தேர்வு செய்ய பிரதமர் மோடி அறிவுறுத்தல்..!

ஒன்றிய அரசு பணிகளுக்கு அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை தேர்வு செய்ய பிரதமர் மோடி அறிவுறுத்தல்..!
By: TeamParivu Posted On: June 14, 2022 View: 115

இந்தியாவில் ஒன்றிய அரசு பணிகளுக்கு அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை தேர்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.  

அனைத்துத்துறை அமைச்சகங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை தொடர்பாக ஆய்வு நடத்திய பிரதமர் மோடி இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார். 2020, 2021 ஆகிய 2 வருடங்களில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பெருமளவு பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது. அதில் பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். பலர் தங்களுடைய தொழிலை மீண்டும் தொடங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். பலர் தங்களது வேலைகளை இழந்து புதிய வேலைகளை தேடி கொண்டிருக்கின்றனர். இத்தகைய சூழலில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை ஒன்றிய அரசு பணிகளில் சேர்க்க பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் இப்பணிகளை விரைந்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார். எனவே புதிதாக கல்லூரிகளில் இருந்து பட்டம் பெற்று வரும் மாணவர்கள், ஏற்கனவே வேலை தேடி கொண்டிருக்கும் இளைஞர்கள் ஆகியோருக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு பணிகள் அதிகரிக்கப்படுவதால் வேலையில்லா திண்டாட்டம் ஓரளவு குறையும் என எதிர்பார்க்கலாம். பிரதமர் மோடி கூறியுள்ளபடி, அடுத்த ஒன்றரை ஆண்டில் ஒன்றிய அரசின் துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:
#இந்தியா  # அரசு பணி  # வேலைவாய்ப்பு  # பிரதமர் நரேந்திர மோடி 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..