மாநில கல்விக் கொள்கை உருவாக்குவது குறித்து வரும் 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.
ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்வி கொள்கை நாடு முழுவதும் வரும் கல்வியாண்டில் அமலுக்கு வருகிறது. இந்த கல்வி கொள்கையில் இருக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் ஏற்க முடியாது என்று திமுக அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது. கூறிப்பாக 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு அதையே போன்று கல்லூரிக்கு செல்லவேண்டும் என்றாலும் நுழைவு தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஏற்க முடியாத நிலையில் இருப்பதற்காக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழதற்கு என பிரதேக மாநில கல்வி கொள்கை உருவாக்கபடும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். உயர்நிதிமன்றம் ஒய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழுவினரோடு முதல்முறையா வரும் 15-ம் தேதி காலை 10.30 மணிக்கு தலைமை செயலகத்தில் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்திற்கான இந்த மாநில கல்வி கொள்கை எப்படி அமைய வேண்டும். தொலைநோக்கு பார்வையுடன் அடுத்து 25 ஆண்டுகளுக்கு தமிழகத்தினுடைய கல்வி எத்தகைய வளர்ச்சியை அடைய வேண்டும், தமிழகத்தின் வரலாறு, பண்பாடு மாணவர்கள் எந்த எந்த துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சார்ந்து இந்த புதிய கல்வி கொள்கை இடம் பெற இருக்கிறது. இதன் தொடர்பாக தான் முதல்வர் ஆலோசனை மேற்க்கொள்ள இருக்கிறார்.
மேலும் ஒரு ஆண்டுக்குள்ளாக இந்த வரைவு கல்வி கொள்கை அறிக்கையை தமிழக அரசிடம் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுருக்கிறது. எனவே மிக விரைவாக இதற்கான பணிகள் எல்லாம் துவங்க இருக்கின்றன. அடுத்த கல்வி ஆண்டில் அல்லது 2023, 2024-ம் கல்வியாண்டில் தமிழகத்திக்கனா இந்த கல்வி கொள்கையை அமல்படுத்துவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதாகவும் கல்வி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tags:
#கல்விக் கொள்கை
# முதல்வர் மு.க.ஸ்டாலின்
# உயர்நிதிமன்றம்
# திமுக