உகாண்டாவின் கியான்ஜா (KYANJA) பகுதியில் சம்பளம் தராததால் அமைச்சர் Charles Engolaவை அவரின் பாதுகாவலரே சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உதவியாளருக்கு நீண்ட காலமாக ஊதியம் தராமல் அமைச்சர் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனால், குறிப்பிட்ட ஒரு பாதுகாவலர் அதிருப்தியில் இருந்துள்ளார். அமைச்சர் வீட்டில் இருந்தபோது அவரிடம் சம்பளம் குறித்து பாதுகாவலர் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாதுகாவலர் அமைச்சரை சுட்டுக்கொன்றார்.
Tags:
##அமைச்சர் #பாதுகாவலர் #சுட்டுக்கொலை