
தனியார் நிறுவன ஊழியர்கள் ஓய்வு பெறும் போது ஈட்டிய விடுப்புக்காக பெறும் தொகை ரூ.3 லட்சத்திற்கு மேல் இருந்தால் வருமானவரி இதுவரை விதிக்கப்பட்டது.
கடந்த பட்ஜெட்டில் இந்த வரம்பு ₹25 லட்சமாக உயர்த்தப்படும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். தற்போது இதற்கான ஆணையை மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த வரிச்சலுகை ஏப்.1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
#வருமானவரி
# தனியார்நிறுவனம்
# ஊழியர்கள்