
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்புவது மற்றும் பிரபலப்படுத்துவது சட்டவிரோதமானது என ஒன்றிய அரசு கூறியுள்ளது.
மேலும் ஆன்லைன் சூதாட்டம் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிதி மற்றும் சமூக ஆபத்தை ஏற்படுத்துகிறது எனவும் ஒன்றிய அரசு கூறியுள்ளது.
இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் இடையே ஆன்லைன் சூதாட்டம் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் மேலும் ஆன்லைன் சூதாட்டம் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் நிதிச்சிக்கல்களையும் உருவாக்குகிறது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இதனால் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பவோ, பிரபலப்படுத்தவோ கூடாது என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இணைய ஊடகங்களும் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை வெளியிடக்கூடாது என ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
Tags:
#ஆன்லைன் சூதாட்டம்
# விளம்பரங்கள்
# ஒன்றிய அரசு