12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதி பள்ளிகள் திறப்பு : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!!

12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதி பள்ளிகள் திறப்பு : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!!
By: TeamParivu Posted On: May 25, 2022 View: 277

தமிழ்நாட்டில் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 

11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.2022-2023ம் கல்வி ஆண்டுக்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 13ம் தேதி தொடங்குகிறது.

மார்ச் 14ம் தேதி 11ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகிறது. ஏப்ரல் 3ம் தேதி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகிறது. வரும் கல்வியாண்டில் கொரோனா கால அட்டவணை போல் இல்லாமல் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும். வரும் கல்வி ஆண்டு முதல் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும். நீட் தேர்வுக்கு இனி தனியே பயிற்சி வழங்கப்படாது.பள்ளிகளிலேயே மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,என்றார்.

Tags:
#தமிழ் நாடு  # பள்ளி மாணவர்கள்  # பள்ளிகள் திறப்பு  # அமைச்சர் அன்பில் மகேஷ் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..