கல்லூரி வளாகத்திலிருந்து வெளியேறினாலும் வெளியே எங்களின் போராட்டம் தொடரும்: மாணவிகள் தகவல்..!!

கல்லூரி வளாகத்திலிருந்து வெளியேறினாலும் வெளியே எங்களின் போராட்டம் தொடரும்: மாணவிகள் தகவல்..!!
By: TeamParivu Posted On: March 30, 2023 View: 66

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவுக்கு ஏப்.6-ம் தேதி வரை விடுமுறை என கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார். ருக்மணி தேவி கவின் கலைக் கல்லூரி இன்று முதல் ஏப்.-ம் தேதி வரை மூடப்படுவதாக முதல்வர் பாக்கல ராமதாஸ் அறிவித்துள்ளார். 


விடுதியில் தங்கியுள்ள மாணவிகளும் வெளியேற வேண்டும் என லாஷேத்ரா முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மார்ச் 30லிருந்து ஏப்.6-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த தேர்வுகளும் தள்ளிவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்.6-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் கலாஷேத்ராவை விட்டு வெளியேற மறுத்து மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கல்லூரி வளாகத்திலிருந்து வெளியேறினாலும் வெளியே எங்களின் போராட்டம் தொடரும் என மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:
#மாணவிகள்  # சென்னை  # போராட்டம் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..