உடல் உறுப்பு தானம் செய்யும் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான தற்செயல் விடுப்பு 30 நாட்களில் இருந்து 42 நாளாக அதிகரிப்பதற்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசின் பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரு நன்கொடையாளரிடமிருந்து உறுப்புகளை அகற்றுவது மிக பெரிய அறுவை சிகிச்சையாகும். இது மருத்துவமனையில் சேர்க்கப்படுதல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலங்கள் உட்பட மீட்க நேரம் தேவைப்படுகிறது.
ஒன்றிய அரசு ஊழியர்களிடையே உடல் உறுப்பு தானத்தை ஊக்குவித்து இன்னொரு மனிதனுக்கு உதவும் உன்னத செயல்பாட்டை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு ஊழியர் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செயவதற்கு அதிகபட்சமாக 42 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நன்கொடையாளருக்கு எந்த வகையான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டாலும் அவருக்கு 42 நாள் விடுப்பு வழங்கப்பட வேண்டும் என அரசு பதிவு பெற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்கள் அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர்.
Tags:
#உடல்உறுப்புதானம்
# அரசுஊழியர்
# விடுப்பு
# ஒன்றியஅரசு