சென்னையில் நாளை மறுநாள் முதல் வாகனங்களுக்கான வேகக்கட்டுப்பாடு அமல்ப்படுத்தப்படும். இந்த திடீர் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
30 கிமீ வேகம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகனங்கள் அனைத்தும் 30 கிமீ வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்ற அறிவிப்பை போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் வாகனங்களுக்கான வேக வரம்புகளை திருத்தி அமைத்து அந்த உத்தரவானது விரைவில் கடைபிடிக்கப்பட இருக்கிறது.
வேகக்கட்டுப்பாடுகள்
அதன்படி வாகன வேகங்களுக்கான கட்டுப்பாடுகள் அனைத்தும் வருகிற 4-ந் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. இது குறித்து சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலகு ரக வாகனங்களுக்கு 60 கிமீ வேகமும், கனரக வாகனங்களுக்கு 50 கிமீ வேகமும், இரு சக்கர வாகனங்களுக்கு 50 கிமீ வேகக்கட்டுப்பாடும், க் ஆட்டோ போன்ற வாகனங்களுக்கு 40 கிமீ வேகக்கட்டுப்பாடும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நடவடிக்கை
குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வாகனங்களும் 30 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். இந்த உத்தரவானது நாளை மறுநாள் 4-ந் தேதி முதல் கடைபிடிக்கப்பட இருக்கிறது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபராதம்
இதனை மீறுபவர்களுக்கு 1000 ரூபாய் அபராதாக விதிக்கப்படும் என போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அதிர்ச்சி
இதற்கு முன்னதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து யாரும் இதனை கடைபிடிக்கவில்லை. இந்நிலையில் நாளை மறுநாள் முதல் இந்த வேகக்கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருந்தாலும் ஒரு பக்கம் ஆட்டோ ஓட்டுனர்கள் மெதுவாக செல்வார்கள் என்ற மகிழ்ச்சியிலும் மக்கள் உள்ளனர்.