தொடர்ந்து அதிகரிக்கும் முட்டை விலை..! காரணம் தெரியாமல் விழிபிதுங்கும் வியாபாரிகள்.

தொடர்ந்து அதிகரிக்கும் முட்டை விலை..! காரணம் தெரியாமல் விழிபிதுங்கும் வியாபாரிகள்.
By: TeamParivu Posted On: November 04, 2023 View: 48

பண்டிகை நெருங்குவதால் முட்டைவிலை உயர்வா? விலை ஏற்றத்திற்கு என்ன காரணம். பின் வரும் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.


நாமக்கல்லில் தொடர்ந்து அதிகரித்து வரும் முட்டைவிலையை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முட்டை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கு பிறகு மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.


இந்நிலையில், தீபாவளி நெருங்குவதால் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அசைவ பிரியர்கள் அனைவரும் முட்டையை விரும்பி சாப்பிடுவார்கள் . இதன் விளைவாக நாமக்கலில் தொடர்ந்தது முட்டை விலை அதிகரித்து வருவதாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுவான (என்இசிசி) முட்டை விலை 5.25 ரூபாய் விலை நிர்ணயம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..