3000 ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம்… நல உதவிகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய நீடா அம்பானி

3000 ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம்… நல உதவிகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய நீடா அம்பானி
By: TeamParivu Posted On: November 04, 2023 View: 44

நீடா அம்பானியின் பிறந்த நாளையொட்டி மும்பையில் குழந்தைகளுக்கான சர்வதேச பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.

தனது 60 ஆவது பிறந்த நாளையொட்டி ரிலையன்ஸ் பவுண்டேஷன் தலைவர் நீடா அம்பானி ஆதரவற்ற 3000 குழந்தைகளுக்கு மும்பையில் நேற்று அன்னதானம் வழங்கினார். ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவராக செயல்பட்டு வரும் நீடா அம்பானி பல்வேறு சமூக சேவைகளில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
ஒலிம்பிக் கவுன்சில் உறுப்பினராக இருக்கும் நீடா அம்பானி இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் இலக்கில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். இந்நிலையில் நீடா அம்பானி நேற்று தனது 60 ஆவது பிறந்த நாளை கோலகலமாக கொண்டாடினார்.

இதையொட்டி 3000 ஆதரவற்ற குழந்தைகளுக்கு நீடா அம்பானி நேரடியாக அன்னதானம் வழங்கி அவர்களின் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டார். நீடா அம்பானியின் பிறந்த நாளையொட்டி குழந்தைகளுக்கான சர்வதேச பள்ளியும் தொடங்கப்பட்டுள்ளது.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..