டீ கொடுக்காததால் ஆபரேஷனை பாதியில் விட்டு சென்ற மருத்துவர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. பணியில் இருந்தபோது டீ கொடுக்காததால் கோபமடைந்த மருத்துவர், அறுசுவை சிகிச்சையை பாதியிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார்.
மருத்துவத்துறைக்கே களங்கத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பலரும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். உண்மையில் என்ன நடந்தது.
இதற்கிடையில், தேஜ்ரங் பாலாவி மருத்துவமனை ஊழியர்களிடம் ஒரு கோப்பை தேநீர் கொண்டு வரும்படி கூறினார். ஆனால் சரியான நேரத்தில் டீ கொண்டு வராததால் ஆத்திரமடைந்த மருத்துவர் எஞ்சிய அறுவை சிகிச்சைகளை செய்யாமல் எதிர்பாராதவிதமாக ஆபரேஷன் தியேட்டரை விட்டு வெளியேறினார்.
சம்பவத்தன்று நான்கு பெண்களுக்கும் மயக்கமருந்து கொடுத்த காரணத்தினால் மயக்கமடைந்துள்ளனர். அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் மருத்துவர் சென்று விட்டார்.