திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்... விசாகப்பட்டினம் ரூட்டில்... ரயில் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்... விசாகப்பட்டினம் ரூட்டில்... ரயில் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்!
By: TeamParivu Posted On: November 12, 2023 View: 29

திருப்பதி என்றாலே ஏழுமலையான் தரிசனம்

 தான் நினைவில்

 தோன்றும். இந்நகரம் மிகச்சிறந்த ஆன்மீக 

சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.

 எனவே பல்வேறு

 நகரங்களில் இருந்து திருப்பதி

 செல்வதற்கு 

பொதுப் போக்குவரத்து வசதிகள் செய்து 

தரப்பட்டு வருகின்றன. அதில் பேருந்து 

மற்றும் ரயில் போக்குவரத்தை 

பயன்படுத்தும் 

நபர்கள் தான் அதிகம்.

ரயில் சேவையை பொறுத்தவரை நவீன மற்றும் சொகுசு வசதிகள் கொண்ட வந்தே பாரத் 
எக்ஸ்பிரஸ்கள் பயன்பாட்டிற்கு வந்ததில் இருந்து, அதன் மீதான மோகம் அதிகரித்து வருகிறது
. இதில் பயணிக்க டிக்கெட் கட்டணம் அதிகமாக இருப்பதால் மேல்தட்டு மக்களுக்கு 
பல்வேறு வகைகளில் பயனுள்ளதாக உள்ளது. விமான சேவைக்கு மாற்றாக பயன்படுத்தி
 கொள்ள சிறப்பான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. தற்போது வரை செகந்திராபாத் - 
திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது.

இது தென் கிழக்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் வருவது கவனிக்கத்தக்கது. இந்த ரயில்
 சேவை பயன்பாட்டிற்கு வந்துவிட்டால் ஆந்திர மாநிலத்தின் இரண்டு எல்லைகளை
 தொடும் வகையில் அமைந்துவிடும். திருப்பதி தென் எல்லையாகவும், விசாகப்பட்டினம்
 கிட்டதட்ட வட எல்லையாகவும் காணப்படுகிறது. தற்போது திருப்பதி - விசாகப்பட்டினம் 
வழித்தடத்தில் 10 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவை குறைந்தது 12 மணி நேரம் எடுத்து 
கொள்கின்றன.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..