நாமக்கல்லில் பால் பதப்படுத்தும் பண்ணை தேசிய பால்வள வாரியத்திடம் பணியை ஒப்படைக்க அனுமதி

நாமக்கல்லில் பால் பதப்படுத்தும் பண்ணை தேசிய பால்வள வாரியத்திடம் பணியை ஒப்படைக்க அனுமதி
By: TeamParivu Posted On: November 18, 2023 View: 78

சென்னை: நாமக்கல்லில் தினசரி 2 லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்தும் பால்பண்ணை, பால் பொருட்கள் தயாரிக்கும் ஆலையை ரூ.89.29 கோடியில் அமைப்பதற்கான பணியை தேசிய பால்வள வாரியத்திடம் ஒப்படைக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
இதுகுறித்து பால்வளத் துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் தினசரி 2 லட்சம் லிட்டர்பாலை பதப்படுத்தும் பால்பண்ணை மற்றும் பால்பொருட்கள் தயாரிக்கும் ஆலையை ரூ.89.29 கோடியில் நிறுவும் பணியை தேசிய பால்வள வாரியத்திடம் ஒப்படைக்க தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்துக்கு அனுமதியளித்து தமிழகஅரசால் கடந்த நவ.16-ம்தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுஉள்ளது. பால் கூட்டுறவு சங்கங்களுக்கான பால் உட்கட்டமைப்பு திட்டச் செயல்பாட்டில் தேசிய பால்வள வாரியத்தின் தனித்தன்மையைக் கருத்தில் கொண்டு, நாமக்கல்லில் தினசரி 2 லட்சம் லிட்டர் ‘ஹைடெக் பால் பண்ணையை நிறுவுதல்’ என்ற திட்டம், வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டள்ளது.பொருளாதார உயர்வு: நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார உயர்வு ஆகியவற்றை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். நுகர்வோரின் எதி்ர்காலத் தேவையைப் பூர்த்தி செய்யவும் பால் பதப்படுத்துதலை விரிவுபடுத்தவும் இத்திட்டம் மிகவும் அவசியமானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..