ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்கு ரூ.28.35 கோடி செலவில் 5 புதிய கட்டிடங்கள்: தமிழக அரசு அறிவிப்பு..!!

ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்கு ரூ.28.35 கோடி செலவில் 5 புதிய கட்டிடங்கள்: தமிழக அரசு அறிவிப்பு..!!
By: TeamParivu Posted On: November 15, 2022 View: 74

ஆதிதிராவிடர் மாணக்கரின் உயர்கல்விக்கு உதவிடும் பொருட்டு அவர்கள் பாதுகாப்பாகத் தங்கி கல்வி பயிலும் வகையில், 5 கல்லூரி மாணாக்கர் விடுதிகளுக்கு ரூ.28.35 கோடி செலவில் புதிய விடுதிக் கட்டடங்கள் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழக முதல்வர் எண்ணத்திற்கு உருகொடுக்கும் வகையில் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் 2022-2023 ஆம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது கீழ்கண்ட அறிவிப்பை வெளியிட்டார்.

“ஆதிதிராவிடர் மாணக்கரின் உயர்கல்விக்கு உதவிடும் பொருட்டு அவர்கள் பாதுகாப்பாகத் தங்கி கல்வி பயிலும் வகையில், இதுவரை வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மாணவியர் விடுதி மற்றும் பழுதடைந்த கட்டடங்களில் இயங்கி வரும் கடலூர் மாணவியர் விடுதி, கோயம்புத்தூர் (வடக்கு) மாணவர் விடுதி, திண்டுக்கல் மாவட்டம், பழனி மாணவர் விடுதி மற்றும் திருப்பூர் மாணவர் விடுதி ஆகிய 5 கல்லூரி மாணாக்கர் விடுதிகளுக்கு ரூ.28.35 கோடி செலவில் புதிய விடுதிக் கட்டடங்கள் கட்டப்படும்”.

மேற்படி அறிவிப்பினை நிறைவேற்றும் பொருட்டு வாடகை கட்டடங்கள்/ பழுதடைந்த கட்டடங்களில் இயங்கி வரும் 5 கல்லூரி மாணவ மாணவியர்கள் விடுதிகளுக்கு தாட்கோவின் மூலம் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு, ரூ.27,76,69,000/- க்கு நிருவாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:
#ஆதிதிராவிடர்  # விடுதி  # தமிழக அரசு 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..