மாநில அந்தஸ்து வழங்க கோரி புதுச்சேரியில் 28ம் தேதி பந்த்: அதிமுக அறிவிப்பு..!!

மாநில அந்தஸ்து வழங்க கோரி புதுச்சேரியில் 28ம் தேதி பந்த்: அதிமுக அறிவிப்பு..!!
By: TeamParivu Posted On: December 23, 2022 View: 74

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. தற்போது, புதுச்சேரி நிர்வாகத்தின் முழு அதிகாரமும் துணைநிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில் உள்ளது. புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி இருந்தாலும் கவர்னருடனான கருத்து வேறுபாட்டால் அரசு நிர்வாகம் முடக்கப்படுகிறது.

முன்பு, புதுச்சேரிக்கு 80 சதவீதம் மத்திய அரசு நிதி அளிக்கப்பட்டது. தற்போது 20% மட்டுமே வழங்கப்படுகிறது. புதுச்சேரி மாநில மக்கள் நலன்கருதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அங்கீகாரம் கிடைக்க மாநில அந்தஸ்து தேவை என்பதை அதிமுக மீண்டும் வலியுறுத்துகிறது. 

எனவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி வரும் 28ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Tags:
#மாநிலஅந்தஸ்து  # புதுச்சேரி  # பந்த்  # அதிமுக 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..