திண்டுக்கல் இடையகோட்டையில் 117 ஏக்கர் பரப்பில் 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு சாதனை..!!

திண்டுக்கல் இடையகோட்டையில் 117 ஏக்கர் பரப்பில் 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு சாதனை..!!
By: TeamParivu Posted On: December 23, 2022 View: 69

இடையகோட்டையில் 117 ஏக்கர் பரப்பில் 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு சாதனை செய்துள்ளனர். அதை, இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார். 

தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று இரவு திண்டுக்கல் வருகை தந்தார். அவருக்கு மாவட்ட எல்லையான கொடைரோடு சுங்கச்சாடி பகுதியில் அமைச்சர்கள்  பெரியசாமி,  சக்கரபாணி தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து மாவட்ட விளையாட்டு மைதானம், வீராங்கனைகள் தங்கும் விடுதி, நீச்சல் குளம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதை தொடர்ந்து, திண்டுக்கல் இடையகோட்டையில் 117 ஏக்கர் பரப்பில் 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு சாதனை செய்துள்ளனர். அதனை, இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார். முதலமைச்சரின் பசுமை புரட்சி திட்டத்தின் படி வனப்பரப்பை 28%-லிருந்து 33%-ஆக அதிகரிக்க மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டது. சந்தனம், செம்மரம், வேம்பு, தேக்கு உள்பட 43 வகையான மரக்கன்றுகளை பெண்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் நட்டனர். 

மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பங்கேற்றனர்.

Tags:
#மரக்கன்றுகள்  # சாதனை  # உதயநிதிஸ்டாலின் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..