புதிய வகை கொரோனா பரவல் எதிரொலியாக புதுச்சேரி அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
சீனாவில் கொரோனாவின் தீவிரம் அதிகமாக உள்ளதால், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களாக ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மருத்துவ நிபுணர்கள், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தொடர்ந்து மாநிலங்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாட்டில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் தயார்நிலையை உறுதி செய்யும் நோக்கில் பல மாநிலங்களின் மருத்துவமனைகளில் இன்று (டிச. 27) சுகாதார ஒத்திகை நடைபெற்றது. புதிய வகை கொரோனா பரவல் எதிரொலியாக புதுச்சேரி அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதில்; மக்கள் அனைவரும் அனைத்து பொது இடங்கள், கடற்கரை சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக விலகைக் கடைபிடிக்க வேண்டும்.
எதிர்வரும் புது வருட கொண்டாட்டங்களுக்கு 01/01/2023 அன்று 01.00 AM மேல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து உணவகங்கள், ஹோட்டல்கள், பார்கள், மதுபான கடைகள், விருந்தோம்பல் மற்றும் கேளிக்கை துறை நிறுவனங்கள் தடுப்பு உரிய நடைமுறைகளை (SOP) பின்பற்றி தங்களில் வழக்கமான நேரங்களில் செயல்பட அனுமதி வழங்க படுகிறது. மேலும், தங்களின் அனைத்து ஊழியர்களும் முகக்கவசம் அணிவது மட்டுமல்லாது மற்றும் இரண்டு தவணை தடுப்பூசிகள் போட பெற்றிருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்துக் கல்வி நிறுவனங்களும் கோவிட் 19 தடுப்புக்குரிய நடைமுறைகளின் (SOP) படி செயல்பட வேண்டும்.
மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் பொது அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து தனியார் கடைகள் மாற்றும் தொழில் நிறுவனங்களும் தங்களின் சராசரி நேரங்களில் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது ஆனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் 100% தடுப்பூசி போட்டுள்ளனர் என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து வழிபாட்டு தலங்களிலும் முன்பு பின்பற்றிய கோவிட்-19 தடுப்புக்குரிய நடைமுறைகளைப் (SOP) பின்பற்றி செயல்பட வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
Tags:
#முகக்கவசம்
# கொரோனா
# புதுச்சேரிஅரசு