இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு குறித்து முதல்வர் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழாவின் மாநில அளவிலான போட்டிகள், கடந்த 27ம்தேதி முதல் துவங்கியுள்ளது. இந்த போட்டிகள் சென்னை, மதுரை, கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டி வரும் 30ம்தேதி வரை நடைபெறும்.
வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஜன.12ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இதில் 5 ஆயிரம் மாணவர்கள் பங்கு பெறுகிறார்கள். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
பாடத்திட்டத்தில் திருக்குறள் குறைவாக இருக்கிறது. அதனை முழுமைப்படுத்த வேண்டும் என்று உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ள கருத்து, அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும்’ என்று தெரிவித்தார்.
Tags:
#கல்வியாண்டு
# திருக்குறள்
# அமைச்சர்