கோவை கார் குண்டு வெடிப்பில், ஷேக் இதயதுல்லா, சனோபர் அலி என இரண்டு பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கோவையில் கடந்த அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்பில் ஜமேஷா முபின் என்ற நபர் உயிரிழந்தார். அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில் வெடி மருத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேரை போலீசார் உபா சட்டத்தில் கைது செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை என்.ஐ.ஏவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும் என்ஐஏ போலீசார் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
மேலும் குற்றவாளிகள் 6 பேரையும் கோவையில் இருந்து சென்னைக்கு அழைத்து சென்று ரகசிய இடத்தில் வைத்து என்ஐஏ போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதன் பின்னர் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டு கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவருகிறது. இந்நிலையில், ஷேக் இதயதுல்லா, சனோபர் அலி என இரண்டு பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
Tags:
#கோவை
# குண்டுவெடிப்பு
# என்ஐஏ