சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது; ஆதாரத்துடன் பேச வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்..!

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது; ஆதாரத்துடன் பேச வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்..!
By: TeamParivu Posted On: January 11, 2023 View: 51

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது; ஆதாரத்துடன் பேச வேண்டும் என அதிமுக ஆட்சியில் நடந்த துப்பாக்கிச் சூடு, கலவரங்களை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

கேள்வி நேரத்துடன் தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; பெண்களுக்கு எதிராக குற்றம் செய்வோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது; ஆதாரத்துடன் பேச வேண்டும். ஒட்டுமொத்தமாக சட்ட ஒழுங்கு கெட்டு விட்டதாக எடப்பாடி பழனிசாமி சொல்கிறார்; அவருடைய ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்பதை பெரிய பட்டியலே வைத்திருக்கிறேன். கேள்வி நேரம் நிறைவடைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி பேச முயற்சி; பேச நேரம் தருவதாக சபாநாயகர் கூறியதை அடுத்தும் தொடர்ந்து பேசி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி பேச அனுமதிகொடுங்கள் என சபாநாயகரிடம் கூறிய முதலமைச்சர், அவர்கள் ஆதாரங்களுடன் கூறினால் நான் பதிலளிக்க தயார். சபாநாயகரை குற்றம்சாட்டி பேசுவது மரபல்ல என எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ், முதலமைச்சர் மு க ஸ்டாலினிடையே கார சார விவாதம் நடைபெற்ற நிலையில் வெளிநடப்பு செய்தது.

Tags:
#சட்டம்ஒழுங்கு  # முதலமைச்சர்  # முகஸ்டாலின்  # சட்டப்பேரவை  # வெளிநடப்பு 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..