முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைப்பு; அரசாணை வெளயீடு...!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைப்பு; அரசாணை வெளயீடு...!
By: TeamParivu Posted On: June 02, 2022 View: 95

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் செயலர்கள் அலுவல் சார் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் குறித்த சிக்கல்களை களையும் வண்ணம் மாநில கொள்கைகளை மேம்படுத்த வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் உறுப்பினர் செயலாளராகவும், பள்ளிக்கல்வி, உயர்க்கல்வி, போக்குவர்த்துத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட 12 துறைகளை சேர்ந்த முதன்மை செயலாளர்கள் உறுப்பினர்களாகவும், அலுவல் சாரா உறுப்பினர்களாக மூன்று சட்ட மன்ற உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழு, மாற்றுத்திறனாளிகள், தங்களின் உரிமைகளை முழுவதுமாக அனுபவிக்கும் வகையில் கொள்கைகளை வகுப்பது, மாற்றுத்திறனாளிகளின் சிக்கலை உடனடியாக தீர்ப்பது, உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்பதுடன், அரசுக்கு பரிந்துரைகளையும் வழங்கும். இந்த குழு பரிந்துரைப்பதை தமிழக அரசு வரும் நாட்களில் திட்டமாக செயல்படுத்தும். மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் மேம்பாடு என்ற அடிப்படையில் இந்த குழு அமைக்கப்பட்டு உள்ளது.

Tags:
#தமிழக அரசு  # ஊனமுற்றோருக்கான மாநில ஆலோசனை வாரியம்  # முதல்வர் மு.க.ஸ்டாலின்  # அரசாணை வெளயீடு 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..