ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு பேரணிகளை நடத்த அனுமதி: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!!

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு பேரணிகளை நடத்த அனுமதி: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!!
By: TeamParivu Posted On: February 10, 2023 View: 51

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு தொடர்பான ஐகோர்ட் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. ஆர்எஸ்எஸ் பேரணியை உள்ளரங்கு கூட்டமாக நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ஐகோர்ட் ரத்து செய்தது. ஆர்எஸ்எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கடந்த தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் பேரணி நடத்த காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடப்பரப்பட்டிருந்தது. இதனை விசாரித்த தனி நீதிபதி, 44 இடங்களில் உள்ளரங்க நிகழ்வாகவும், 6 இடங்களில் ஊர்வலமாகவும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை நடத்தி கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் தரப்பில் பொதுவெளியில் நடத்த அனுமதி அளிக்குமாறும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யுமாறும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது, கருத்துரிமை, பேச்சுரிமையை தடுக்காத வகையில் அரசு செயல்பட வேண்டும்.

கடுமையான ஒழுங்குகளுடன் பேரணியை அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளது. மேலும், அணிவகுப்புக்கு அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும் விண்ணப்பங்களை சட்டப்படி பரிசீலித்து முடிவெடுக்கவும் காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:
#ஆர்எஸ்எஸ்அணிவகுப்பு  # ஐகோர்ட் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..