குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 இன்னும் 5 மாதங்களில் கொடுக்கப்படும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி..!!

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 இன்னும் 5 மாதங்களில் கொடுக்கப்படும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி..!!
By: TeamParivu Posted On: February 21, 2023 View: 73

பெண்களுக்கான உரிமை தொகை 1000 ரூபாய்க்கு நான் உறுதிமொழி கொடுப்பதாக ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.


 ஈரோடு கிழக்கு கணபதி நகர் பகுதியில்  இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிரச்சார வாகனத்தில் பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், வாக்குசாவடியில் முதல் பெட்டியில்  இரண்டாவதாக கை சின்னம் இருக்கும் என்றும், இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கையில்  முதல் இடத்தில் இருக்கனும் எனவும் தெரிவித்தார்.

திருமகன் ஈவேரா 9 ,000 வாக்கு வித்தியாசத்தில ஜெயிக்க வைத்தீர்கள், ஈவிகேஎஸ் இளங்கோவனை இன்னும் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்தால் மாதம் ஒரு முறை இங்கே வந்து தங்குகின்றேன் எனவும் தெரிவித்தார்.மேலும் 50 ஆயிரம் வாக்கு வி்த்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், அதிமுக வேட்பாளரை மக்கள் விரட்டி அடிக்கின்றதை தொலைக்காட்சியில் பார்த்து இருப்பீர்கள் என தெரிவித்தார்.

முந்தைய ஆட்சியாளர்கள் அரசின் கஜானா 5 லட்சம் கோடி கடனில் வைத்திருத்தார்கள். ஆட்சிக்கு வந்த பின்கொரனா நிவாரண தொகை , பால் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பேருந்து, மக்களை தேடி மருத்துவம், காலை சிற்றுண்டி திட்டம் இப்படி பல திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags:
#உரிமைதொகை  # அமைச்சர்  # உதயநிதிஸ்டாலின் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..