சிறந்த தரமான மருத்துவம் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் ரூ.1,136 கோடியில், 44 மருத்துவமனைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மற்றும் முதலமைச்சர் காலை உணவு திட்டம் உள்ளிட்ட ‘ஏற்றமிகு 7 திட்டங்களை’யும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாள் முதல் சமுதாயத்தின் விளிம்புநிலை மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, இதுவரை அரசால் வழங்கப்பட்டு வந்த மாதாந்திர உதவித்தொகையை ரூ.1,000ல் இருந்து, ரூ.1,500ஆக உயர்த்தி வழங்கியது.
இத்திட்டங்களின் விரிவாக்கமாக ஏற்றமிகு 7 திட்டங்களின் கீழ் புதிய திட்டங்களை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அந்த 7 திட்டங்கள் பின்ருமாறு..
1. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் தொடக்கம்.
2. திருநங்கைகளுக்கான மாதாந்திர உதவித் தொகை ரூ.1500ஆக உயர்த்தி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
3. முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
4. தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தொழில்முனைவோர்களாக்க சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டது.
5. மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனை பட்டாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
6. சிறந்த தரமான மருத்துவம் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் ரூ.1,136 கோடியில் 44 புதிய மருத்துவமனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
7. பல்வேறு அரசு பணிகளில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர், எம்பி, எம்எல்ஏக்கள் அரசு துறை செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
Tags:
#முதல்வர்
# அடிக்கல்