மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையில் திடீர் தீ விபத்து: ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்..!!

மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையில் திடீர் தீ விபத்து: ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்..!!
By: TeamParivu Posted On: March 01, 2023 View: 68

மதுரை சரவணா ஸ்டோர்ஸில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். 

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே சுமார் 5 ஏக்கர் பரப்பளவில், 6 லட்சம் சதுர அடி கொண்டு பிரம்மாண்டமாக சரவணா ஸ்டோர்ஸ் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளத்திலும் சுமார் 60 ஆயிரம் சதுர அடி என்கிற அளவில் 10 தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 1000 கார்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு இந்த கட்டிடத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

கீழ் தளத்தில் ஜுவல்லரியும், 2வது தளத்தில் துணி கடையும், 3வது தளத்தில் குழந்தைகளுக்கான துணி என படிப்படியாக மக்களுக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 9வது தளத்தில் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 9வது தளத்தில் தான் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடையில் இருந்த வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றிவிட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் சரவணா ஸ்டோர்ஸ் உள்ளே வருவதற்கும் ஊழியர்கள் கட்டுப்பாடு விதித்துள்ளனர். தீ விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு 2க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்து இறங்கிய தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி 108 அம்புலன்ஸ் சேவையும் வரவழைக்கப்பட்டுள்ளது. சரவணா ஸ்டோர்ஸ் கடையின் 9வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags:
#சரவணாஸ்டோர்ஸ்  # தீவிபத்து 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..