தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவும் வதந்தி தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். பீகார் அதிகாரிகள் குழு தமிழ்நாடு வர உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அறிவுரை வழங்கி வருகிறார்.
Tags:
#புலம்பெயர்தொழிலாளர்கள்
# முதலமைச்சர்
# ஆலோசனை