திருச்சியில் நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறியதில் 3 பேர் உயிரிழந்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் கீதாபுரம் அருகே நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறி இறங்கியதில் யாசகர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் மதுபோதையில் காரை ஒட்டி விபத்தை ஏற்படுத்திய லட்சுமிநாராயணன், அஸ்வந்த் ஆகியோரை கைது செய்துள்ளார். பின்னர், 3 பேரின் உடல்களை மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுபோதையில் காரை ஓட்டி வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 3 பேர் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த காரை பொதுமக்கள் அடித்து உடைத்துள்ளார்.
நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறியதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விபத்து ஏற்படுத்திய நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
#நடைபாதை
# ஸ்ரீரங்கம்