உலக தண்ணீர் தினமான மார்ச் 22ல் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

உலக தண்ணீர் தினமான மார்ச் 22ல் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு..!!
By: TeamParivu Posted On: March 17, 2023 View: 64

உலக தண்ணீர் தினமான மார்ச் 22ல் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தாரேஸ் அகமது ஐஏஎஸ் அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் உலக தண்ணீர் தினமான மார்ச் 22ம் தேதி காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில்; உலக தண்ணீர் தினமான 22.03.2023 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி உலக தண்ணீர் தினமான 22.03.2023 அன்று காலை 11.00 மணி அளவில் நடத்திட வேண்டும்.

கிராம சபைக் கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்திடக் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே ஊரகப் கூடாது. 
பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும்.

கிராம சபை நடத்துவது குறித்து பதிவு செய்திடும் பொருட்டு கைபேசி செயலி (Android application) ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது.

அதனைப் பயன்படுத்தி நிகழ்நேர கிராம சபை கூட்ட நிகழ்வுகளை உள்ளீடு செய்திடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் 22.03.2023 அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டம் அணைத்து
கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திடவும் மற்றும் கூட்டம் தொடர்பான
அறிக்கையினை இவ்வியக்ககத்திற்கு 31.03.2023-க்குள் அனுப்பி வைக்கவும் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags:
#தண்ணீர்தினம்  # ஊராட்சி 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..