விவசாயிகளுக்கு விரைவில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி..!!

விவசாயிகளுக்கு விரைவில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி..!!
By: TeamParivu Posted On: April 05, 2023 View: 60

மின் பகிர்மானத்திற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் முடிந்த பிறகு விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்ட பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் பேசியதாவது:


24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்பது முதல்வரின் உத்தரவு. துணை மின்நிலையங்கள் அமைப்பது, புதிய மின் மாற்றிகள் அமைப்பது போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தபட கூடிய பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விரைவாக அந்த பணிகள் முடிவடைந்த புறகு விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். சிவகங்கை தொகுதியில் மொத்தம் உள்ள 1.5 லட்சம் விவசாயிகளில் 3,232 விவசாயிகள் இலவச மின் இணைப்பு பெற்று பயனடைந்துள்ளனர். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Tags:
#மும்முனைமின்சாரம்  # செந்தில்பாலாஜி  # சட்டபேரவை 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..