திருத்தணி ஆர்டிஓ அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறை தீர்ப்பு சிறப்பு முகாம் நடந்தது. திருத்தணி ஆர்டிஓ அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறை தீர்ப்பு சிறப்பு முகாம் வருவாய் ஆர்டிஓ. ( பொறுப்பு) மதுசூதனன் தலைமையில் நடந்தது.
இந்தமுகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், முருக்கம்பட்டு கிராமத்தில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய இருசக்கர வாகனங்கள் வழங்க வேண்டும், வங்கி மூலம் கடன் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் கொடுக்கப்பட்டது.
Tags:
#ஆர்டிஓ
# மாற்றுத்திறனாளிகள்
# குறைதீர்ப்புமுகாம்