பிளஸ் 2 பொதுத்தேர்வு; கணித பாடத்துக்கு கூடுதல் மார்க்..!!

பிளஸ் 2 பொதுத்தேர்வு; கணித பாடத்துக்கு கூடுதல் மார்க்..!!
By: TeamParivu Posted On: April 09, 2023 View: 41

தமிழகத்தில் கடந்த மார்ச் 13ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி ஏப்ரல் 3 வரை நடந்து முடிந்தது. இந்த தேர்வை 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இருப்பினும், பிளஸ்-2 தேர்வில் தமிழ் உள்ளிட்ட முக்கிய பாட தேர்வுகளை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாமல் ஆப்சென்ட் ஆனது மாநிலம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் கணித பாடத்தில் கேட்கப்பட்டிருந்த கேள்வி எண் 47(b) தவறாக கேட்கப்பட்டிருந்ததாக மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது. மேலும், அந்த கேள்விக்கான மதிப்பெண்ணை தேர்வுத்துறை வழங்கிட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இந்த நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணிதப் பாடத்தின் கேள்வி எண் 47(b) க்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, கேள்வி எண் 47(b)-க்கு மாணவர்கள் பதிலளிக்க முயற்சித்து இருந்தால் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதுபோல, தமிழகம், புதுச்சேரியில் கடந்த வியாழக்கிழமை அன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த பொதுத்தேர்வினை 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். 12,639 பள்ளிகளிலும், 4,025 மையங்களிலும், 182 தனியார் மையங்களிலும் தேர்வு நடைபெறுகிறது. சிறைக்கைதிகள் 264 பேரும், மாற்றுத்திறன் மாணவர்கள் 13,151 பேரும் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகளை அரசு தேர்வுத்துறை மூலம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    

Tags:
#பொதுத்தேர்வு  # மாணவர்கள்  # மதிப்பெண் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..