டெல்லியில் வசித்து வந்த அரசு பங்களாவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காலி செய்தார். அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் தண்டனை விதித்ததால் ராகுலின் எம்.பி.பதவி பறிக்கப்பட்டது.
எம்.பி.பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய செய்யப்பட்டதால் அரசு பங்களாவை காலி செய்ய நாடாளுமன்ற செயலகம் உத்தரவிட்டது. இதனால் 19 வருடங்களாக வசித்து வந்த டெல்லி துக்ளக் சாலையில் உள்ள 12-ம் எண் பங்களாவை காலி செய்து ராகுல்காந்தி வெளியேறினார்.
இதனை அடுத்து ராகுல்காந்தி, சோனியா காந்தி வசித்து வரும் எம்பர் சாலையில் உள்ள 10-ம் எண் பங்களாவில் குடியேறுவதாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். சோனியா காந்தி ஜம்பக் சாலையில் உள்ள 10-ம் எண் பங்களாவில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்த பங்களா அவர் மக்களவை உறுப்பினர் என்ற அடிப்படையில் வருக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாவே ராகுல்காந்தி அவரது அரசு பங்களாவில் இருந்து அவரது பொருட்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
2023 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த போது சூரத் நீதிமன்றம் ராகுல்காந்தி அவதூறு வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்து, 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. அதற்கு அடுத்த நாளே மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனை தொடர்ந்து அவர் அரசு பங்களாவை காலி செய்யவேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனிடையே ராகுல்காந்தி சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்துள்ளார். இந்த நிலையில் டெல்லி துக்ளக் சாலையில் உள்ள 12-ம் எண் பங்களாவை காலி செய்து ராகுல்காந்தி வெளியேறினார்.
Tags:
#அரசுபங்களா
# காங்கிரஸ்
# ராகுல்காந்தி