மதுரையில் மெட்ரோ ரயில் பாலம் அமைக்க மண் பரிசோதனை..!!

மதுரையில் மெட்ரோ ரயில் பாலம் அமைக்க மண் பரிசோதனை..!!
By: No Source Posted On: April 16, 2023 View: 93

 மதுரை திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையிலான 31 கி.மீ தூரத்திற்கு 18 ரயில் நிலையங்களுடன், மெட்ரோ ரயில் திட்டம் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. 


இதற்காக தமிழ்நாடு அரசு ரூ.8500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. திட்டப்பணிகள் 2024இறுதியில் துவங்கி 2027க்குள் முடியும் என, அதன் இயக்குநர் சித்திக் சில நாட்களுக்கு முன்பு கூறினார். இதனைத்தொடர்ந்து திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கி.மீ மெட்ரோ ரயில் பாதைக்கு உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு தேவையான இடங்களை தேர்வு செய்து வல்லுனர் குழுவினர் ஆய்வு செய்தனர். முதற்கட்டமாக திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 64 இடங்களை தேர்வு செய்து மண் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக ஐதராபாத் அனுப்பி வைக்கப்பட உள்ளது. நேற்று முன்தினம் திருநகர் தனக்கன்குளம் சந்திப்பு அருகில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி துவங்கியது.



Tags:
#மதுரை  # மெட்ரோரயில்பாலம்  # மண்பரிசோதனை 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..