பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 20ல் தொடங்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம். அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் இரண்டிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலமும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16 முதல் தொடங்குகிறது.
ஆகஸ்ட் 22 முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். முதல் 15 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் 7 நாட்களில் கட்டணத்தை செலுத்த வேண்டும். பொறியியல் படிப்பு கலந்தாய்வு 4 கட்டங்களாக நடைபெற்று 2 மாதங்களில் முழுமையாக நிறைவடையும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, அரசு கலைக்கல்லூரியில் சேர ஜூன் 27 முதல் விண்ணப்பிக்கலாம்.
ஜூலை 15ம் தேதி வரை கலைக்கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.
ஜூலை 25 முதல் கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். பொறியியல் படிப்புக்கு கடந்த ஆண்டு கட்டணமே வசூலிக்கப்படும் என்று குறிப்பிட்டார். அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா விரைவில் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீட் தேர்வு முடிவு வந்த பிறகே பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கும் எனவும் அமைச்சர் கூறினார்.
Tags:
#பொறியியல் படிப்பு
# ஆன்லைன் விண்ணப்ப பதிவு
# அமைச்சர் பொன்முடி
# அரசு கலைக்கல்லூரி