கோவையில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் 6 பேருக்கு எதிராக என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஜமிஷா முபின் ஐ.இ.டி. வகை குண்டு பயன்படுத்தியதாக தேசிய புலனாய்வு முகமை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்துள்ளது எனவும் ரயில் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்களில் தாக்குதல் நடத்த திட்டம் எனவும் இதுவரை 6 பேர் மீது உபா சட்டம் உள்ளிட்ட 16 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.
Tags:
#என்ஐஏ
# கோவை