சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு கிறிஸ்தவ திருச்சபைகளின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், தமிழகத்தில் தனியார் பள்ளிகளை முறைப்படுத்துவது தொடர்பாக 2018ம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முறைப்படுத்தல் சட்டம் இயற்றப்பட்டது. சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் பள்ளிகள் தொடங்க அரசு அனுமதி பெற வேண்டும். சிறுபான்மை அந்தஸ்து கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிகள் கூறப்பட்டிருந்தன. இது சிறுபான்மையினருக்கான உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பாலாஜி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ் ஆஜராகி, கடந்த 1973ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு உயர் நீதிமன்றத்தால் 1975ல் ரத்து செய்யப்பட்ட பல பிரிவுகள், புதிய சட்டத்தின் மூலமும், விதிகளின் மூலமும் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வழக்குகளை உயர் நீதிமன்றத்துக்கே மாற்றியது.
அப்போது புதிய சட்டம் கொண்டு வரப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று, 1973ம் ஆண்டு சட்டம் அமல்படுத்துவதில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று வாதிட்டார்.
அப்போது புதிய சட்டம் கொண்டு வரப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று, 1973ம் ஆண்டு சட்டம் அமல்படுத்துவதில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று வாதிட்டார்.
இதற்கு அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க கூடாது. உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த விதிகள் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், சிறுபான்மையல்லாத தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், புதிய சட்டம் மற்றும் விதிகளை அமல்படுத்துவதில் ஜூன் 15ம் தேதி வரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
Tags:
#தனியார்பள்ளி
# ஐகோர்ட்