பசுமை சென்னை திட்டத்தின் கீழ் பூங்காக்களில் மரம் நடும் பணி..!!

பசுமை சென்னை திட்டத்தின் கீழ் பூங்காக்களில் மரம் நடும் பணி..!!
By: TeamParivu Posted On: April 23, 2023 View: 70

 சென்னை திட்டத்தின் கீழ், கொளத்தூரில் உள்ள பூங்காக்களில் மரம் நடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.சென்னையில் மேம்பால பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் பணிகளுக்காக பல்வேறு மரங்கள் அகற்றப்பட்டன. இதனை ஈடு செய்யும் வகையில் பசுமை சென்னை திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள ஒவ்வொரு வார்டுகளிலும் 50க்கும் மேற்பட்ட மரங்களை நட சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 65வது வார்டில் உள்ள திருவீதி அம்மன் கோயில் பூங்கா மற்றும் பூம்புகார் நகர் 4வது தெருவில் உள்ள பூங்கா உள்ளிட்ட இடங்களில் ஒரேநாளில் 50க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டன.

நைசர் பவுண்டேஷன் அறக்கட்டளை, திருவிக நகர் மண்டல அதிகாரிகள் சார்பில் இந்த மரங்கள் நடப்பட்டன. இதில் அரசமரம், நாவல் மரம், ஆலமரம், பாதாம் மரம் உள்ளிட்ட 10 வகையான மரங்கள் நடப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் நைசர் பவுண்டேஷன் தலைவர் ரத்தினகுமாரி, திருவிக நகர் மண்டல செயற்பொறியாளர் செந்தில்நாதன், உதவி செயற்பொறியாளர் பாபு, 65வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாரதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:
#சென்னை  # பசுமைதிட்டம்  # பூங்கா  # மரம்நடும்பணி 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..