மனதின் குரல் 100: சிறப்பான தருணங்களின் போட்டோ ஷேர் பண்ணுங்க - மோடி ட்வீட்...!!

மனதின் குரல் 100: சிறப்பான தருணங்களின் போட்டோ ஷேர் பண்ணுங்க - மோடி ட்வீட்...!!
By: TeamParivu Posted On: April 30, 2023 View: 69

மனதின் குரல் 100வது நிகழ்ச்சியைக் கேட்ட அனைவரும் சிறப்புத் தருணங்களின் படங்களைப் பகிருமாறு பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.


கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி மனதின் குரல் என்ற பெயரில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி வானொலி வாயிலாக உரையாற்றினர். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கும் தனது உரை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் வானொலி ஊடகத்தை பிரதமர் தேர்வு செய்தார். இந்நிகழ்ச்சிக்கு நாட்டு மக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுகிழமை பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி வானொலியில் ஒலிபரப்பானது. இதுவரை 99 அத்தியாயங்கள் ஒலிபரப்பாகி உள்ளன. இதில், பல்வேறு துறை சார்ந்த சாதனையாளர்கள் மற்றும் நாட்டிற்கு பங்களித்த எளிய மக்களின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் விரிவாகப் பேசினார்.

Tags:
#மனதின்குரல்  # மோடி  # ட்வீட் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..