பானிபூரியில் உப்பில்லை: பேக்கரி கடைக்குள் பெட்ரோல் குண்டு வீச்சு..!!

பானிபூரியில் உப்பில்லை: பேக்கரி கடைக்குள் பெட்ரோல் குண்டு வீச்சு..!!
By: TeamParivu Posted On: May 02, 2023 View: 64

திருப்பூரில் பானிபூரியில் உப்பில்லை என பேக்கரி கடைக்குள் பெட்ரோலிய குண்டு வீசிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கொடுவாய் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு வயது 30. இவர் பெருந்தொழுவு அருகே கோவில்பாளையம் பிரிவில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை இவரின் கடைக்கு வந்த இரண்டு இளைஞர்கள் பானி பூரி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். அதில் ஒருவருக்கு உப்பு அதிகமாகவும் மற்றொருவருக்கு உப்பே இல்லாமலும  விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மது போதையில் இருந்த இளைஞர்கள் இரண்டு பேரும் இதுகுறித்து கடையில் இருந்தவர்களிடம் தகராறு செய்து பணத்தை வீசிவிட்டு பாக்கி பணத்தை வாங்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சற்று நேரம் கழித்து மேலும் இரண்டு நண்பர்களுடன் அதே கடைக்கு சென்று மது பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி  வீசிவிட்டு தப்பி சென்றனர்.

Tags:
#திருப்பூர்  # பானிபூரி  # பேக்கரி  # பெட்ரோல்குண்டு 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..