வெளிநாட்டுப் பயணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை அமெரிக்கா நீக்கியுள்ளது.
2020 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு உலகையை முடக்கியது. உலக நாடுகள் அனைத்து தனித் தனித் தீவுகளாக மாறும் சூழல் உருவானது. அதனையடுத்து, கொரோனா பாதிப்பு குறைந்த சூழலில் வெளிநாட்டுப் பயணங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தன. அதனைத்தொடர்ந்து, கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டறியப்பட்ட பின், தடுப்பூசிகள் கட்டாயமாக்கப்பட்டன.
வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் கொரோனா தடுப்பூசியைக் கட்டாயமாக செலுத்திருக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு நிபந்தனை விதித்தது. இந்த நிலையில், அமெரிக்காவில் வரும் 11-ஆம் தேதியுடன் பொதுச் சுகாதார அவசரநிலை முடிவுக்கு வருவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
Tags:
#கொரோனா
# தடுப்பூசி
# அதிபர்
# ஜோபைடன்