திருப்பதியில் சுற்றுச்சூழல் பாதுகாக்க மூங்கிலால் உருவான தண்ணீர் பாட்டில்கள்: ரூ.30க்கு விரைவில் விற்பனை..!!

திருப்பதியில் சுற்றுச்சூழல் பாதுகாக்க மூங்கிலால் உருவான தண்ணீர் பாட்டில்கள்: ரூ.30க்கு விரைவில் விற்பனை..!!
By: TeamParivu Posted On: May 08, 2023 View: 55

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் பாதுகாக்க மூங்கிலால் உருவான தண்ணீர் பாட்டில்கள் விரைவில் பக்தர்களுக்கு ரூ.30க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்துக்களின் கலியுக வைகுண்டமாக கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள திருமலையில் சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமலையில் கண்ணாடி பாட்டில்களில் ரூ.70க்கு 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் விற்கப்படுகிறது. தண்ணீர் குடித்த பின்னர் பாட்டில் திரும்ப கொடுத்தால் ரூ.50 வழங்கப்படுகிறது. இதனை சாதாரண பக்தர்கள் விலை கொடுத்து வாங்க முடியாது என்பதால் தேவஸ்தானம் சார்பில் பல இடங்களில் ஜலப்பிரசாதம் என்ற பெயரில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், குழாய்களில் விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், மூங்கிலால் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக ஒடிசா மாநிலத்தில் இருந்து மூங்கில் கொண்டு வரப்பட்டு, இயந்திரங்கள் மூலம் மூங்கில் வெட்டி அழகிய வடிவில் குடிநீர் பாட்டில்கள் தயார் செய்யப்பட்டு தற்ேபாது, பக்தர்களுக்கு ரூ.30க்கு விற்பனை செய்ய தேவஸ்தான அதிகாரிகள் தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த முறையில் கொண்டுவர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மூங்கில் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதால், மேலும் அதன் சுவை கூடும் என்பதால் இந்த பாட்டில் பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த மூங்கில் தண்ணீர் பாட்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

Tags:
#திருப்பதி  # சுற்றுச்சூழல்  # மூங்கில்பாட்டில் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..