பொதுமக்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக ஆலந்தூர் – வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில், 20 மெட்ரோ ரயில் கூடுதலாக இயக்கப்படுகிறது என்று மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். சென்னையில் விமானநிலையம் – விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை – சென்ட்ரல் என இரு வழித்தடங்களில் 54 கி.மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதில் பள்ளி – கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் என தினசரி 2.50 லட்சம் பேர் வரை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் மெட்ரோ ரயில்களில் அதிகமானோர் செல்வதால், கூட்ட நெரிசல் இயல்பாகவே ஏற்படுகிறது.
இதில் பள்ளி – கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் என தினசரி 2.50 லட்சம் பேர் வரை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் மெட்ரோ ரயில்களில் அதிகமானோர் செல்வதால், கூட்ட நெரிசல் இயல்பாகவே ஏற்படுகிறது.
அதன்படி, ஆலந்தூர் – வண்ணாரப்பேட்டை வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையொட்டி, மெட்ரோ அதிகாரிகள் இந்த வழித்தடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். ஆலந்தூர் முதல் வண்ணாரப்பேட்டை வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த வழித்தடங்களுக்கு, 1ம் தேதி முதல் 20 ரயில்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தடத்தில் 3 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:
#ஆலந்தூர்
# வண்ணாரப்பேட்டை
# மெட்ரோ
# ரயில்சேவை