செய்யாறு அருகே தந்தையின் இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு அதிகாரிகளுக்கு தாலி, கம்மல், மூக்குத்தியைக் கழட்டி கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த இளநீர்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன் என்பவரின் மகள் திலகவதி. அவர் கணவனை இழந்துவாழ்ந்துவருகிறார். அவர் தனது தந்தையின் இறப்புச் சான்றிதழ் கேட்டு செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த வருடம் ஜூன் மாதம் விண்ணப்பத்துள்ளார்.
திலகவதியின் தந்தை கடந்த 1972-ம் வருடத்தில் இறந்துள்ளதால் அப்போது இறப்பு குறித்து பதிவு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் பரசுராமன் இறப்பு குறித்து ஓராண்டுக்குள் பதிவு செய்யப்படாமல் விடுபட்டதால் சான்றிதழ் வாங்குவது குறித்து ஆட்சேபனை இருப்பின் 15 தினத்திற்குள் தெரிவிக்கும்படி கடந்த வருடம் நவம்பர் மாதம் 30-ம் தேதி சார் ஆட்சியர் அலுவலகம் மூலம் செய்தித்தாளில் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது.
Tags:
#இறப்புசான்றிதழ்
# திருவண்ணாமலை