நடப்பாண்டு சுதந்திர தின விழாவில் சமூக சேவகர், தொண்டு நிறுவன விருது பெற விண்ணப்பிக்கலாம்: சமூக நலத்துறை அறிவிப்பு..!!

நடப்பாண்டு சுதந்திர தின விழாவில் சமூக சேவகர், தொண்டு நிறுவன விருது பெற விண்ணப்பிக்கலாம்: சமூக நலத்துறை அறிவிப்பு..!!
By: TeamParivu Posted On: May 16, 2023 View: 57

நடப்பாண்டிற்கான சுதந்திர தின விழாவில் சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதுகளை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என சமூக நலத்துறை அறிவித்துள்ளது.

விருதிற்கு விண்ணப்பம் செய்வது தொடர்பான விவரங்கள் அனைத்தும் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் பெற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டியவர்களின் தகுதிகள்:

* தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.


* குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மகளிர் நலனுக்காக தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


* நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருத்தல் வேண்டும்.

இணையதளத்தில் விண்ணப்பித்தவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் சென்று அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். எனவே அனைத்து மாவட்டங்களிலும், பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலர்களை நேரில் அணுகி வருகின்ற ஜூன் 10ம் தேதிக்குள் கருத்துருக்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது என துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:
#நடப்பாண்டு  # சுதந்திரதினவிழா  # சமூகசேவகர்  # விருது 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..